திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Sunday, August 28, 2011

மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:34
மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து நீங்களே தயாரித்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் உலர்ந்த திராட்சை 60 கிராம், ஏலக்காய் 30 கிராம், சீரகம் 2 கிராம், வால் மிளகு அரை கிராம், ரோஜா இதழ்கள் 2 கிராம், கீழாநெல்லி வேர் 5 கிராம். இவை எல்லாமே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை வாங்கி வந்து இடித்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, 100 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் எளிதான வழியும் ஒன்று உள்ளது. அதாவது, உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, மலச்சிக்கல் தீரும். இவ்வாறு செய்து வர மலச்சிக்கல் குணமாகிவிடும்
.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites