திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Wednesday, July 13, 2011

சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு தமிழக அரசின் கடன் உதவி



தமிழக அரசு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம் மூலம் இஸ்லாமிய,கிருத்துவ,புத்த,சீக்கிய மற்றும் பெர்ஸிய இளைஞர்களுக்கு (சிறுபான்மையின இளைஞர்களுக்கு) ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.
இத்திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் : 
  • இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய/கிருத்துவ/புத்த/சீக்கிய/பெர்ஸிய இளைஞராக இருக்க வேண்டும்
  • ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொருவரும் ரூ. 800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும்.
  • 2 ஆட்டோ ஒட்டுநரின் பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி அளிக்கின்றது.
இக்கடனை பெற பின்வரும் அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் :
இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம்.
807 அண்ணா சாலை,
5வது தளம், சென்னை-2
தொலைபேசி: 044-28514846
Fax: 28515450

அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்

மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி

பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
மேலும் விபரங்கள் அறிய :http://www.tn.gov.in/bcmbcmw/tamco.htm

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites